நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு!!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீது ஒரு மாதத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த விவ­காரம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதி­ராக, மாகல்­கந்த சுதத்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமா­னப்­படை அதிகா­ரி­யான சுனில் பெரேரா ஆகியோர் உயர் நீதி­மன்றில் வழக்கு தொடர்ந்­தி­ருந்­தனர்.
ரஞ்சன் ராம­நா­யக்­க­விற்கு எதி­ராக உயர் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மனுவில், கடந்த 2017 ஓகஸ்ட் 21 ஆம் திகதி ஊட­கங்­க­ளிடம் கருத்து வெளி­யிட்ட ரஞ்சன், நாட்டில் பெரும்பாலான சட்­டத்­த­ர­ணிகள் ஊழல் ­வா­திகள் என குறிப்­பிட்­டுள்­ள­தா­கவும், நாடாளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் இவ்­வாறு கூறி­ய­மை­யா­னது, மக்­க­ளுக்கு நீதித்துறை தொடர்பில் இருக்கும் நம்­பிக்­கையை சீர்­கு­லைக்க வாய்ப்­புள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
இதனால், நீதி­மன்­றத்­திற்கு அப­கீர்த்தி ஏற்­பட்­டுள்­ள­தா­கவும், இது தொடர்பில் விசா­ரணை நடத்தி பிரதி அமைச்­ச­ருக்கு எதி­ராக உரிய தண்­ட­னையை வழங்­கு­மாறும் மனு­தா­ரர்கள் கோரி­யுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment