26 ஆம் திகதி போட்டியுடன் ஓய்வு பெறுவதாக மாலிங்க அறிவிப்பு

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியதன் பின்னர்  சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து  ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
பங்களாதேஷ் அணியுடனான முதலாவது போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்தில்  இடம்பெறவுள்ளது.
பங்களாதேஷ் அணியுடன் இலங்கை அணி 3 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதலாவது போட்டியில் விளையாடியதன் பின்னரே மாலிங்க ஓய்வுபெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment