சந்தானம் படத்தை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்


சந்தானம், தாரா நடித்த ‛ஏ1' படம், கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இதனை ஜான்சன் என்பவர் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் காமெடி என்ற பெயரில் பிராமண பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினார்கள். சென்னை மற்றும் விழுப்புரத்தில் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்தப் படத்தை தடை செய்யக்கோரி ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கத்தின் சார்பில் பரங்கிமலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் கண்ணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் ஏ1 படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment