ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணி குறித்து அமைச்சர் ராஜித தகவல்

ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணி தொடர்பில் எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கூட்டணி அமைப்பது தொடர்பிலான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. கூட்டணியின் அரசியலமைப்பு அமைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளது. கூட்டணியின் சின்னம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து தீர்மானங்கள் குறித்து எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் வைத்து நாட்டு மக்களுக்கு அறிவிக்கவுள்ளோம். ஜனநாயக தேசிய முன்னணியாகவே இந்த கூட்டணி மக்களிடம் வருகின்றது எனவும் அமைச்சர் மேலும் கூறினார். 
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment