பலாலி விமான நிலையம் ; புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தும் பணிகள் சற்றுமுன்னர் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பிரதம விருந்தினராக்கக் கலந்து கொண்டு புனரமைப்பு தொடர்பில் அமைக்கப்பட்ட திரைக்கல்லை திரை நீக்கம் செய்து வைத்து புனரமைப்புப் பணிகளை  ஆரம்பித்து வைத்தார்.

இதில் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  இந்திய துணைதூதுவர் அரச அதிகாரிகள் போது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்திய அரசின் உதவியுடன் பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு சிவில் விமான நிலையமாக மாற்றியமைப்பதற்கான அபிவிருத்திப் பணிகளே ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.












Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment