12 நெடுங்குடியிருப்புகள் தீக்கிரை

டயகம - சந்திரிகாமம் தோட்டத்தில் நேற்று இரவு 9 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 நெடுங்குடியிருப்புகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சில வீடுகள் முற்றாகவும், சில வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்ததுள்ளன.
குறித்த நெடுங்குடியிருப்பில் வசித்துவந்த 09 குடும்பங்களை சேர்ந்த 49 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் உடமைகளும் அழிவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் சந்திரிகாமம் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment