இங்கிலாந்து அணிக்கு மிகப் பெரிய வெற்றி இலக்கு

பர்மிங்காம் டெஸ்டின் 2வது இன்னிங்சிலும் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசியதன் மூலம், இங்கிலாந்து அணிக்கு மிகப் பெரிய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 284 ஓட்டங்களும், இங்கிலாந்து அணி 374 ஓட்டங்களும் குவித்தனர். அதனைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலியா, 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

ஸ்மித் 46 ஓட்டங்களுடனும், ஹெட் 21 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 4ஆம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. அரைசதம் அடித்த டிராவிஸ் ஹெட் 51 ஓட்டங்களில், ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த மேத்யூ வேட் அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். மறுமுனையில் இங்கிலாந்து வீரர்களுக்கு தண்ணி காட்டிய ஸ்மித், இரண்டாவது இன்னிங்சிலும் சதம் விளாசினார். இது அவருக்கு 25வது டெஸ்ட் சதம் ஆகும். இவர்களது பார்ட்னர்ஷிப்பில் அவுஸ்திரேலியாவின் ஸ்கோர் வெகுவாக உயர்ந்தது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment