இலங்கை குறித்து ஆராய்கின்றது மனித உரிமை பேரவை!

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் மார்ச் 20 திகதி இலங்கை குறித்த அறிக்கை பற்றிய விவாதம் இடம்பெறவுள்ளது என ஜெனீவா அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகளின் மனித உரிமை பேரவையின் 40 வது அமர்வு பெப்ரவரி 25 திகதி முதல் மார்ச் 22 திகதி வரை ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது.
ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் மார்ச் மாதத்திற்குள் முன்னேற்றத்தை காண்பிப்பதாக  இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை தொடர்ந்து 40 வது அமர்வின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.
மனித உரிமை ஆணையாளர் அல்லது பிரதி ஆணையாளரால் இலங்கை குறித்த  அறிக்கை சமர்பிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன
ஐக்கியநாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை அடுத்த மாதம் வெளியாகும் அதன் பின்னர் மார்ச் 20 திகதி இது குறித்த விவாதம் இடம்பெறும் என ஜெனீவா பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை தான் வழங்கிய வாக்குறுதிகளை மிகமெதுவாகவே நடைமுறைப்படுத்த முயல்கின்றது என்பதை அடிப்படையாக வைத்து இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment