விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வட மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும் என்று நீதிமன்று உத்தரவு வழங்கியது.

இததை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டின் பிரகாரம் விக்னேஸ்வரன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் வட மாகாண அமைச்சர் ப.டெனீஸ்வரன் இந்த வழக்கைத் தக்கல் செய்திருந்தார்.  அதன்படி இன்று இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்படும் என கடந்த விசாரணையின் போது மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி ஒத்தி வைக்கப்பட்டது.

Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment