தமிழ் முற்போக்கு அரசாங்கத்தில் முன்னணி நீடிக்குமா?

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பள விவகாரம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று மாலை 4 மணிக்கு அலரி மாளிகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்

இப் பேச்சு வார்த்தையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஸன், பிரதி தலைவர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன் மற்றும் பழனி திகாம்பரம் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டுமென அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.

எனினும், போராட்டங்களை புறக்கணித்து 700 ரூபாய்க்கு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ் முற்போக்கு முன்னணி, சம்பள பிரச்சினையில் நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்காவிட்டால் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவோம் என அண்மையில் குறிப்பிட்டது.

இதன் பின்னணியில் இன்றைய சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இன்றைய சந்திப்பில் சாதகமான தீர்மானம் கிடைக்காவிட்டால் தமிழ் முற்போக்கு முன்னணியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களும் ஹட்டன் வீதியில் அமர்ந்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராடுவேம் என நேற்று தமிழ் முற்போக்கு முன்னணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment