வெளிநாட்டவர்களை வெளியேற்றுங்கள் ; ரணில் அதிரடி உத்தரவு

இஸ்லாமிய பாடசாலைகள் மற்றும் மதரசாக்களில் போதனைகளில் ஈடுபடும், வெளிநாட்டவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு  பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

சுற்றுலா வீசா மூலம்,  இலங்கை வந்துள்ள இஸ்லாமிய போதகர்கள் பலரும், இஸ்லாமிய பாடசாலைகள், மதரசாக்களில் மத போதனை மற்றும்  அரபுமொழியைக் கற்பித்து வருகின்றனர்.

இவற்றின் ஊடாகவே, அடிப்படைவாத கருத்துக்கள் பரப்பப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதுடன்,  இவ்வாறான மதப் பாடசாலைகளைத் தடை செய்யுமாறு, கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையிலேயே 600 வெளிநாட்டவர்களையும்,  வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

 இவர்கள் எப்படி வீசா பெற்றனர், அவர்களுக்கான இருப்பிட வசதிகளைச் செய்து கொடுத்தது யார் என்பன போன்ற விவரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, முஸ்லிம் விவகார அமைச்சின் அதிகாரிகளுக்கும் பிரதமர்  உத்தரவிட்டுள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment