திருகோணமலையைக் கடக்கும் பானி புயல்

வங்காளவிரிகுடாவில் இலங்கைக்கு வடமேல் திசையில் உருவான பானி புயல் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் திருகோணமலையிலிருந்து வடமேல் திசையில் 640 கிலோ மீற்றருக்கு அப்பால் நகரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த சூறாவளியான ' FANI' (உச்சரிப்பு 'போனி') வட அகலாங்கு 11.1N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 86.5 E இற்கும் அருகில் திருகோணமலைக்கு அருகாமையில் நிலை கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு பலத்த சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இது மேலும் விருத்தியடைந்து வடக்கு திசைக்கு அழுத்தத்தை கொடுத்த வகையில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கரையோரத்தை சென்றடையும்  

நாட்டிலும் நாட்டை சுற்றியுள்ள கடற் பிரதேசத்தில் கடும் காற்று மற்றும் கடும் மழையுடனான காலநிலை நிலவக் கூடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக  மத்திய மலை பிரதேசத்திலும், வடக்கு, வட மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். ஊவா, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லி மீற்றர்க்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும். ஏனைய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி இடம்பெற கூடும்.

இந்த சூறாவளி கட்டமைப்பு அழுத்தத்தின் காரணமாக எதிர்வரும் சில தினங்களில் நாடு முழுவதிலும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் மே மாதம் 3 ஆம் திகதி வரையில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும். 

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பாக வெளியிடப்படும் அறிக்கை தொடர்பில் தொடர்ந்து கவனம் செலுத்துமாறு பொது மக்கள், மற்றும் கடற் தொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment