பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாடசாலைகள் ஆரம்பம்

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில்   இரண்டாம் தவணைப் பாடசாலை இன்றையதினம்  ஆரம்பிக்கப்பட்டன. 

எனினும் மாணவர்களின் வரவு குறைவாகவே காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள் ஆரம்பிப்பது பிற்போடப்பட்டிருந்தது.

இன்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் புத்தகப் பைகளை, பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் இராணுவம், பொலிஸார் இணைந்து சோதனைக்கு உட்படுத்தினர்.

பாடசாலைகளுக்கும் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள்  போடப்பட்டுள்ளது.








Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment