தீவிரவாதிகள் என்றெண்ணி நடிகர்களை கைதுசெய்த பொலிஸார்

தீவிரவாதிகள் போல் வேடமிட்டிருந்த துணை நடிகர்கள் இருவரை நிஜத் தீவிரவாதிகள் என எண்ணி பொலிஸார் கைது செய்த சம்பவம் ஒன்று மும்பையில் அரங்கேறியுள்ளது.

மும்பை நகரின் வசாய் பகுதியில் சிகரெட் வாங்குவதற்காக சுற்றி திரிந்த இருவரை தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் மும்பை பொலிஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின்போது,  வசாய் பகுதியின் அருகே பாலிவுட் நடிகர்கள் ஹிரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ரோஃப் ஆகியோர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்ததும், கைது செய்யப்பட்டவர்கள் அந்த திரைப்படத்தில் வரும் காட்சிக்காக தீவிரவாதிகள் போல் வேடமிட்டிருந்த துணை நடிகர்கள் என்பதும் தெரியவந்தது.

ஆனாலும் பொதுவெளியில் மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் சுற்றித்திரிந்ததாக துணைநடிகர்கள் இருவர் மீதும் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment