தெரிவுக்குழுவில் முன்னிலையாக மாட்டேன் – ஜனாதிபதி அதிரடி

தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், தான் முன்னிலையாக மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவுக்குழுவென்பது அரசியல் நாடகம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் அத்தோடு அதை தற்போது அளரிமாளிகையில் நடித்துப் பழகுவதாகவும் மறுநாள் அதனை நாடாளுமன்றத்தில் நடித்துக்காட்டுகின்றனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியல் அமைப்பிற்கும் உயர்நீதிமன்றத்திற்கும் எதிராகவே தெரிவுக்குழு செயற்படுகிறதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment