மக்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காகவே பதவிகளை துறந்தோம்

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மீது ஏற்பட்டுள்ள மக்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காகவே பதவிகளை இராஜினாமா செய்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபிர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, எவரையும் பாதுகாப்பதற்காக தங்களின் அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் குறிப்பிடுகையில், நாட்டின எதிர்காலம் சிக்கல் நிலையை சந்தித்துள்ளது. இதனை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராவிட்டால் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினை எழுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே இவ்வாறான ஒரு சூழ்நிலையில் நாங்கள் எவரையும் பாதுகாக்க எண்ணவில்லை. நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியே சிந்தித்தோம். நாட்டை பாதுக்கவேண்டியதே அவசியமாகும்.
எனவே, பாதுகாப்புத் துறையின் விசாரணைகளுக்கு முஸ்லிம் பிரதிநிதிகள் இடமளிப்பதில்லை என்று குற்றஞ்சுமத்தியமை மற்றும் இது குறித்து மக்களிடையே எழுந்துள்ள சந்தேகத்தை தீர்த்துவைப்பதற்காகவே நாங்கள் பதவிகளை இராஜினாமா செய்தோம்” என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஈஸ்டர் தினத் தாக்குதல்களில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் தொடர்புபட்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் அவர்களைப் பதவி விலகுமாறு பரவலாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment