விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வந்தால், நாளை ஏற்பாடு

மாகாண சபைத் தேர்தலை ஒக்டோபர் 15 ஆம் திகதிக்குள் நடாத்த முடியுமாக இருந்தால், ஜனாதிபதித் தேர்தலையும் எதிர்பார்த்த தினத்திலேயே நடாத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லையென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை நடாத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் போது அந்தத் தேர்தல் தேவை என குரல் எழுப்பியவர்கள் எம்மீது இப்போது குற்றம்சாட்டுகின்றனர். ஜனாதிபதித் தேர்தலை பிற்போடும் சதியாக இதனைச் சித்தரிக்கின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு எந்தவொரு தீர்மானமும் இல்லை. அது உரிய முறையில் நடக்கும். ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை வைத்து பழைய முறைப்படியேனும் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு தேவையான பிரகாரம் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை இன்றிரவு விடுத்தாலும், நாளை தேர்தலை நடாத்த தேவையான நடவடிக்கையை எம்மால் முன்னெடுக்க முடியும் எனவும் ஆணைக்குழு தலைவர் மேலும் கூறினார்.
தனியார் வானொலியொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment